×

வீட்டில் புகுந்து 8 பவுன் நகை திருட்டு

கோவை, அக்.2:  கோவை பேரூரை அடுத்த ஆறுமுககவுண்டனூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகன் ராஜகணபதி (29). இவர், சம்பவத்தன்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு யாரோ வீட்டின் கதவை உடைத்து, உள்ளே புகுந்து அங்கிருந்த 8 பவுன் நகையை திருடிச்சென்று விட்டனர். இது குறித்து ராஜகணபதி, பேரூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : home ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு