×

மூதாட்டிக்கு தொல்லை வாலிபருக்கு 2 ஆண்டு சிறை

கோவை, அக்.2: கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த 75 வயது மூதாட்டி, கடந்த ஆண்டு மே மாதம் கன்னியாகுமரியில் இருந்து பெங்களூருக்கு ஐ லேண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார். முன் பதிவு செய்த பெட்டியில் மூதாட்டி பயணம் செய்த போது அதே பெட்டியில் பயணம் செய்த சுப்ரமணியம்பாளையத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ஸ்ரீகணேஷ் (35) என்பவர் தொல்லை ெகாடுத்து வந்தார். மூதாட்டி, பெட்டியில் அமைதியாக இடையூறு இல்லாமல் பயணம் செய்யவேண்டும் எனக்கூறியும் ஸ்ரீகணேஷ் கேட்காமல் ெதாடர்ந்து தொந்தரவு செய்யும் வகையில் பேசியுள்ளார். மேலும் ஒரு பெண்ணிடமும் அவர் அத்துமீறி நடந்து கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக கோவை ரயில் நிலையத்தில், மூதாட்டி டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீகணேசை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கோவை ஜே.எம்.எண் 6 ேகார்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீகணேசுக்கு 2 ஆண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Tags : jail ,molestation victim ,
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!