×

மகளிர் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

ஈரோடு, அக். 2: ஈரோடு எஸ்பி அலுவலக வளாகத்தில் செயல்படும், ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக ஜெயா பணியாற்றி வந்தார். இவர், திருச்சி மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நாகலட்சுமி, ஈரோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். இவர், நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Tags : Inspector ,Women's Station ,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு