×

செந்துறையில் பிளாஸ்டிக், காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி

அரியலூர், அக்.2: செந்துறைகடைவீதியில் உள்ள கடைகளில் திடீரென அரசு அதிகாரிகள் அரசினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்களை பறிமுதல் செய்தனர்.அரியலூர்மாவட்டம்செந்துறைநகரப்பகுதியில்உள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளில் செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி உத்தரவின் பேரில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம், வட்டார மருத்துவ சுகாதார அலுவலர்அன்பழகன், செந்துறை ஊராட்சி எழுத்தர் அமிர்தலிங்கம் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நேற்று திடீரென நடத்திய சோதனையில் அரசினால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள், உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை பறிமுதல் செய்தனர். இதில் பிளாஸ்டிக் பயன்படுத்திய ஒரு கடைகளுக்கு ரூ-100 என்ற வீதத்தில் பல்வேறு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டது.

Tags : Centurion ,
× RELATED ரபாடாவின் இன்ஸ்விங்கை சமாளிக்க...