×

சட்ட விரோதமாக மணல் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் கிளீனர் கைது

பெரம்பலூர்,அக்.2: பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சட்ட விரோதமாக லாரியில் மணல் கடத்திய டிரைவர், கிளீனரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் துறையூர் சாலையில் பாளையம் கிராமத்தின் அருகே நேற்று முன்தினம் இரவு 1.40மணியளவில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் அழகேசன் உள்ளிட்டப் போலீசார் வாகனத் தணிக் கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ் வழியே மணல் ஏற்றிவந்த லாரி ஒன்றை மறித்து இன்ஸ்பெக்டர் சோதனையிட்டார். அதில் கன்னியாகுமரி மாவட்டம், சூரியமேடு, மேத்துடும் மால் அடுத்த வரிகாணிவில்லை கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் சுந்தர்ராஜ் என்பவ ருக்குச் சொந்தமான லாரி என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், புதுக்கோ ட்டை மாவட்டத்திலிருந்து 6 யூனிட்மணல் திருட்டுத் தனமாக கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து லாரி டிரைவரான கன்னியாகுமரி மாவட்டம், மெது கும்மல் கிராமம்,சூரிமேடு, அப்பட்டுவிலை பகுதியை ச்சேர்ந்த செல்லப்பன் மகன் சோபாகுமார்(29) மற்றும் லாரியின் கிளீனரான, பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம், வன்னிமலை பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் மணி (20) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப் பதிந்து, விசாரணைசெய்து வருகின்றனர். மேலும் லாரியை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது