×

வீட்டுக்கு இணைப்பு தராமல் அலைக்கழிப்பு பாடாலூர் மின்வாரிய அலுவலகத்துக்கு பூட்டு

பாடாலூர், அக். 2: ஆலத்தூர் தாலுகா திருவளகுறிச்சி கிராமத்தில் ஒரு வீட்டுக்கு மின்சார இணைப்பு தராமல் அலைக்கழித்ததால் பாடாலூர் மின்வாரிய அலுவலகத்துக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆலத்தூர் தாலுகா திருவளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணி. அதே கிராமத்தில் வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டுக்கு மின் இணைப்பு வேண்டி கடந்த 20 நாட்களுக்கு முன் பாடாலூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். கடந்த 20 நாட்களாக அவர் மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு தொடர்ந்து பலமுறை முறையிட்டுள்ளார்.இதற்கு மின்வாரிய அலுவலகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்ததால் ஆத்திரமடைந்து கல்யாணி, எலக்ட்ரீசியன் ரங்கன் ஆகியோர் சேர்ந்து பாடாலூர் மின்வாரிய அலுவலகத்தை பூட்டி விட்டனர். இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள், பாடாலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மின் இணைப்பு கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மின்வாரிய அலுவலக கதவில் போடப்பட்ட பூட்டை திறந்தனர். இந்த சம்பவத்தால் பாடாலூர் மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : house ,Patalloor ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்