×

கரூர் ஆதி விநாயகர் கோயில் தெரு அரசு பள்ளி சுவரையொட்டிய சாக்கடை வடிகாலுக்கு சிலாப் போடப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர், அக். 2: கரூர் ஆதி விநாயகர் கோயில் தெரு அரசுப்பள்ளி சுவற்றை ஒட்டியுள்ள சாக்கடை வடிகாலில் சிலாப் பொருத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் அருகே ஆதி விநாயகர் கோயில் தெரு உள்ளது. இந்த பகுதியின் வழியாக கரூரில் இருந்து வாங்கல், ஐந்துரோடு, நெரூர் போன்ற பல பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இந்த தெருவில் நடுநிலைப்பள்ளி உள்ளது. நடுநிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் சாலையோரம் உள்ளது. ஆனால், இதன் வழியாக செல்லும் சாக்கடை வடிகால் திறந்த நிலையில் உள்ளது.குறுகிய இந்த சாலையின் வழியாக அதிக வாகன போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில், மற்ற வாகனங்களுக்கு இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் வழி விடுவதற்காக ஒதுங்கும்போது, சாக்கடை வடிகாலில் விழுந்து காயமடைந்து செல்கின்றனர்.இதுபோன்ற சம்பவங்கள் இந்த பகுதியில் அடிக்கடி நடைபெறுவதால் திறந்த நிலை சாக்கடை வடிகாலில் சிலாப் பொருத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Karur Adi Ganesha Temple ,public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...