×

காணொலி மூலம் கவர்னர் குறைகேட்பு

காரைக்கால், அக். 2: காரைக்கால் மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொலி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5  முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது. அதேபோல், வரும் 4ம் தேதி இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதால், குறைகள் தெரிவிக்க விரும்புவோர், 4ம் தேதி காலை 10 முதல் மாலை 3 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில் புகார்களை எழுத்து வடிவில் கொண்டு வந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார். 

Tags : Governor ,
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...