×

சங்கராபுரம் அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

சங்கராபுரம், அக். 2:சங்கராபுரம்  அடுத்த வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் சண்முகவடிவு(28). இவருக்கும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா டி.பி.பாளையம் கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்பவருக்கும், கடந்த 9 மாதங்களுக்கு  முன் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் மதன்குமார் மனைவி ஊரான  வளையாம்பட்டு கிராமத்திலேயே அவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று  அவரது சொந்த கிணற்றில் விழுந்து சண்முகவடிவு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து அவரது தாய் உமாரணி சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார்  கொடுத்தார். அதில், தனது மகள் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் அவருக்கு மனநிலை சற்று பாதிக்கப்பட்டதாகவும், இதன்காரணமாக மனமுடைந்த அவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சப்இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்கு  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Teenager ,suicide ,Sankarapuram ,
× RELATED சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்