உளுந்தூர்பேட்டை, அக். 2: உளுந்தூர்பேட்டையில் தையல் தொழிலாளர் சங்கம் சிஐடியு உளுந்தூர்பேட்டை நகர சிறப்பு பேரவைக் கூட்டம் மாவட்ட பொருளாளர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்டாலின் துவக்க உரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணை செயலாளர் சேகர் தையல் தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து பேசினார். கவுரவ தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் தையல் கடைகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கிட வேண்டும். தையல் தொழிலாளர்களுக்கு கூட்டுறவு வங்கி மூலம் சிறுகடன் வழங்க வேண்டும். பெண் தையல் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகர தலைவர் ரவி, செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் ராஜாராமன், துணைத் தலைவர்கள் சண்முகம், காதர், துணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வி, பத்மபிரியா, ரமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.