×

திருக்கோவிலூரில் மணல் கடத்திய வாலிபர் கைது

திருக்கோவிலூர், அக். 2: திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றின் கரையோர பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில் திருக்கோவிலூர் உதவி ஆய்வாளர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினிலாரியை மடக்கினர். அப்போது அதிலிருந்த ஒரு வாலிபர் தப்பியோடி விட்டார். டிரைவர் மட்டும் சிக்கினார். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் மினிலாரியை சோதனை செய்தனர்.

அதில், சிமெண்ட் சாக்குகளில் மணல் கடத்தியது தெரியவந்தது. பின்னர் டிரைவரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருக்கோவிலூர் அருகே உள்ள வீரட்டகரம் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் வஜ்ரவேல் (29) என்பதும், தப்பியோடிய ஆசாமி திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வஜ்ரவேலை கைது செய்தனர். மேலும் மணலுடன் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை