×

பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பம்-மேலிருப்பு தார்சாலை சேதமடைந்ததால் பொதுமக்கள் அவதி

பண்ருட்டி, அக். 2:  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பம்-மேலிருப்பு தார்சாலை உள்ளது. இந்த சாலை சுமார் 5 மைல் தூரம் கொண்டது. இந்த தார்சாலை தரம் இல்லாமல் போடப்பட்டதால் தற்போது குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இச்சாலை வழியாகத்தான் மாளிகம்பட்டு, தாழம்பட்டு, கீழிருப்பு மற்றும் மேலிருப்பு ஆகிய  பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் உள்ளிட்டோர் சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதியில் விளையும் விவசாய பொருட்களையும் இந்த சாலை வழியாகத்தான் எடுத்து சென்று வருகின்றனர். இந்நிலையில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அவசர வசதிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வருவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் இச்சாலையில் செல்ல பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி
பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே குண்டும் குழியுமாக மாறியுள்ள இச்சாலையை உடனடியாக தரமான தார்சாலையாக மாற்றி அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Panrutti ,Panikkunuppam-Melapuram ,
× RELATED பராமரிப்பு இன்றி கிடக்கும் கால்நடை மருத்துவமனையை சீரமைக்க வேண்டும்