×

கூடலூர் ஊராட்சியில் தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீர்

பெண்ணாடம், அக். 2:  கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்துள்ள கூடலூர் ஊராட்சியில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அனைத்து தெருக்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அனைத்து தெருக்களிலும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

அப்போது அனைத்து தெருக்களிலும் வடிகால் வசதி ஏற்படுத்தி தருமாறு ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டோம். சிமெண்ட் சாலை அமைத்தவுடன் வடிகால் வசதி அமைப்பதாக உறுதியளித்தனர்.ஆனால் இதுநாள் வரை வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்கவில்லை. இதனால் மழைநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, இப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தற்போது மழைநீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : streets ,Cuddalore Panchayat ,
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...