×

தீபாவளியை முன்னிட்டு ஆலங்குளம் செல்வராணி ஜவுளி ஸ்டோரில் புதிய ரகங்கள் விற்பனை துவக்கம்

ஆலங்குளம், அக். 2:  தீபாவளியை முன்னிட்டு ஆலங்குளம் செல்வராணி ஜவுளி ஸ்டோரில்  அனைவருக்குமான புதிய ரகங்கள், ஆடைகள் அறிமுக விற்பனை துவங்கியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆலங்குளம் செல்வராணி ஜவுளி ஸ்டோரில் அக்டோபர் 1 முதல் 7 வரை தினமும் அனைவருக்கும் ஏற்ற புதிய ரக ஆடைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதன்படி நேற்று கல்லூரி மாணவிகளுக்கான புதிய ஆடைகள் அறிமுகத்துடன் சிறப்பு விற்பனை துவங்கியது. இன்று (2ம் தேதி) தலை தீபாவளி கொண்டாடமாக புதுமண தம்பதிகளுக்கு பட்டு புடவை, ஆடைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நாளை (3ம் தேதி) குழந்தைகளுக்கான புதிய பேஷன் ஆடைகளும், 4ம் தேதி இளம் பெண்களுக்கான மாடல் சேலைகளும், 5ம் தேதி மேட்சிங் மேட்சிங் என குடும்பத்தினருக்கான ஆடைகளும் அறிமுகப்படுத்தப்படும்.

 6ம் தேதி வாடிக்கையாளர் தின சிறப்பு விற்பனை, 7ம் தேதி ஆண்களுக்கான ஆடைகள் அறிமுக விழா நடக்கிறது. மேற்படி நாட்களில் தற்போது தீபாவளிக்கு வந்துள்ள புதிய வகை ஆடைகள் செல்வராணி ஜவுளி  ஸ்டோரின் அனைத்து தளங்களில் பொதுமக்கள் காட்சிக்காக வைக்கபட்டிருக்கும்.வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த மாடல்களை அதற்கென வைக்கபட்டிருக்கும் பிரிவுகளில் வித,விதமான மாடல்களை தேர்வு செய்து பெற்றுக்கொள்ளலாம் என உரிமையாளர் பிரின்ஸ் தங்கம் தெரிவித்தார்.


Tags : Diwali ,Alangulam Selvarani Textile Store ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...