×

தேசிய மரைன் வினாடி வினா போட்டி பூச்சிக்காடு ஜெயந்திநாதர் கல்லூரி மாணவர் சாதனை

திசையன்விளை, அக். 2:  மரைன் கல்லூரிகளுக்கிடையேயான தேசிய வினாடி வினா போட்டியில் பூச்சிக்காடு ஜெயந்திநாதர் மரைன் கல்லூரி மாணவர் முதலிடம் பெற்றார்.தேசிய அளவில் மரைன் தொழில் கருத்தரங்கு, மரைன் கல்லூரிகளுக்கு இடையேயான விழிப்புணர்வு போட்டி சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்தது.

இதில் அகில இந்திய அளவில் மரைன் தொழில்நுட்ப கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் மரைன் சார்ந்த வினாடி வினா போட்டியில் பூச்சிக்காடு ஜெயந்திநாதர் மரைன் கல்லூரி
மாணவர் குமார் தேசிய அளவில் முதலிடம் பெற்றார். அவருக்கு பல்கலைக்கழக தேசிய கருத்தரங்கு சார்பில் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற மாணவர் குமாரை கல்லூரி சேர்மன் கணேசன், செயலாளர் ராஜேஷ், நிர்வாக பிரதிநிதி பெனி, பொறுப்பு முதல்வர் சங்கர், டீன் கேப்டன் டெரன்ஸ், கல்வி ஆலோசகர் ஜேக்கப் செந்தில்குமார், நாட்டிகல் பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பாராட்டினர்.

Tags :
× RELATED ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை