×

திமுக உள்பட கூட்டணி தலைவர்களுடன் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் சந்திப்பு

நெல்லை, அக்.2:  நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரன் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.  நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரூபி மனோகரன் கூட்டணி கட்சி தலைவர்களை  நேற்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். நெல்லை  மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஞானதிரவியம் எம்.பி., திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் திமு ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் காசி விஸ்வநாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பலரை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.  மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கரிசல் சுரேஷ், சமத்துவ மக்கள் கழகத்தின் கராத்தே கணேசன், ஆதி தமிழர் பேரவையின் கலைகண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து தனது வெற்றிக்கு ஆதரவுதருமாறு கேட்டுக்கொண்டார். அவருடன் காங்கிரஸ் செயல்தலைவர் வசந்தகுமார் எம்.பி., மாவட்டத் தலைவர்கள் மாநகர் சங்கரபாண்டியன், கிழக்கு எஸ்கேஎம் சிவக்குமார், மேற்கு பழனி நாடார், சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை, ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவர் வக்கீல் காமராஜ், வர்த்தக அணி ராஜகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Ruby Manoharan ,Congress ,alliance leaders ,DMK ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...