×

பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு

பொன்னமராவதி,அக்.2: பொன்னமராவதி பேரூராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு செய்யப்பட்டுள்ளது.பொன்னமராவதி பேரூராட்சியில் கடந்த சுதந்திரதினத்தை முன்னிட்டு 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று (2ம்தேதி) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொன்னமராவதி பேரூராட்சி சார்பில் பேரூராட்சி பகுதியில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என செயல் அலுவலர் சுலைமான்சேட் கூறினார். இதன் தொடக்கமாக பொன்.புதுபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாளாகம் மற்றும் பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி வாளாகம் ஆகிய இடங்களில் மரக்கன்று நடும் பணியினை செயல்அலுவலர் சுலைமான்சேட் தொடங்கி வைத்தார். இதில் தலைமையாசிரியர்கள் தமிழ்செல்வன், பேரூராட்சி மேஸ்திரிகள் பழனிச்சாமி, பன்னீர்செல்வம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்கிராம பஞ்சாயத்துவரவு செலவுகள் பொதுநிதி மேலாண்மை திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது

Tags : Ponnamaravathi Peruratchi ,area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...