×

தேவகோட்டையில் கிராம உதவியாளர் படுகொலை கண்டித்து புதுகையில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை , அக்.2: தேவகோட்டை அருகே ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம உதவியாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆலங்குடி தாலுகா அலுவலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிராம உதவியாளர் சங்க வட்ட தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், வருவாய்த்துறை சங்க மாவட்ட தலைவர் ஜபருல்லா பேசுகையில், வருவாய்த்துறை ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், கிராம உதவியாளர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்ட தலைவர் புஷ்பராஜ் உட்பட தாலுகா அலுவலக ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.

மணமேல்குடி:மணமேல்குடியில் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணை தாசில்தார் ராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக உதவியாளரை கொலை செய்த கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர்கள் சங்கம் ,கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags : demonstration ,Puthukkudyriya ,village assistant ,Devakottai ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்