×

கோரம்பள்ளம் ஐடிஐயில் மாணவர் சேர்க்கை அக்.11 வரை நீட்டிப்பு

தூத்துக்குடி,அக்.2: தூத்துக்குடி கோரம்பள்ளம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வர் பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் ஆகஸ்ட் 2019ம் ஆண்டிற்கான நேரடி மாணவர்கள் சேர்க்கைக்கு 8ம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது 11.10.2019 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.நேரடி சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் 8 மற்றும் 10ம் வகுப்பு அசல் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை மேற்காணும் அசல் சான்றுகளின் நகல் 5 எண்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 5 எண்கள் ஆகியவற்றை அரசு தொழிற்பயிற்சி நிலையம், கோரம்பள்ளம், தூத்துக்குடிக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அரசு தொழிற்பயிற்சிநிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசால், மாதந்தோறும் உதவித்தொகை ரூ.500, பேருந்து கட்டண சலுகை, இலவச சைக்கிள்,இலவச லேப்டாப், இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், இலவச சீருடை - ஒரு செட், இலவசகாலணி - ஒருஜோடி, போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநரை 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Tags : Korampallam IDI ,
× RELATED கோவில்பட்டியில் மினிவேனில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 6 பேர் கைது