×

தூத்துக்குடியில் பெண் கஞ்சா வியாபாரி மீண்டும் குண்டாசில் கைது

தூத்துக்குடி, அக்.2: தூத்துக்குடியில் பெண் கஞ்சா வியாபாரி மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.தூத்துக்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் நாகூர்ஹனிபா. இவரது மனைவி லைலா என்ற பாத்திமா (46). பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது தாளமுத்துநகர், வடபாகம்  போலீஸ் நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் மற்றும் நகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி பஞ்சவர்ணம் மற்றும் அவரது கூட்டாளிகளை தாளமுத்துநகர் போலீசார் கூண்டோடு கைது செய்தனர். அதில் பாத்திமாவும் ஒருவர். இதனையடுத்து பாத்திமா நெல்லை மாவட்டம் கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பாத்திமாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கோரி எஸ்பி அருண் பாலகோபாலன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் சந்தீப்நந்தூரி, பாத்திமாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன், பாத்திமாவை மதுரை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான ஆணையை நேற்று வழங்கினார். அதன்படி பாத்திமா கொக்கிரகுளம் சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். பாத்திமா ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Woman ganja dealer ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...