×

மகளிர் சுயஉதவி குழுவினர் தூய்மையே சேவை உறுதிமொழி ஏற்பு

திருத்துறைப்பூண்டி, அக்.2:மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் இன்று(2ம் தேதி) கொண்டாடப்படுகிறது, இன்றிலிருந்து ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பயன்படுத்தமாட்டோம் என்றும், தனது வீட்டில் உற்பத்தியாகும் குப்பைகளை தரம்பிரித்து வழங்குவோம் என்றும், திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிபழையஎடத்தெருவில், மகளிர் சுயஉதவி குழுவை சார்ந்த பெண்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் தூய்மைஇந்தியா திட்ட மேற்பார்வையாளர் மாரிதாஸ் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Women's ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...