×

காணொளி காட்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் 4ம்தேதி பொதுமக்கள் குறைகேட்பு

காரைக்கால், அக்.2: வரும் வெள்ளிக்கிழமை (4ம்தேதி) மாலை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி காணொளி மூலம் மக்கள் குறைகளை கேட்கவுள்ளதால், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, தினமும் மாலை 5 முதல் 6 மணி வரை புதுச்சேரியில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் குறைகளை கேட்டு வருகிறார். அதேபோல், காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொளி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது.

அதேபோல், வரும் 4ம்தேதி இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர், வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 3 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில், புகார்களை எழுத்து வடிவில் கொண்டுவந்து முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.  இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Tags : Puducherry ,deputy governor ,
× RELATED அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் பாஜவினர் மீது வழக்கு