×

வேதாரண்யத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

வேதாரண்யம், அக்.2: வேதாரண்யத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அரிமா சங்கம் சார்பில் பூப்பெட்டிக்கடை வீதியில் துவங்கிய இப்பேரணியை டிஎஸ்பி சபியுல்லா தொடங்கி வைத்தார். அரிமா சங்க மாவட்ட முன்னாள் ஆளுநர் வேதநாயகம், அரிமா சங்க தலைவர் செல்வராசு, செயலாளர் சுரேஷ்பாபு, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.முக்கிய வீதிகள் வழியே சென்ற பேரணி வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் நிறைவடைந்தது. பேரணியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்.


Tags : Vedanta ,
× RELATED ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் ரூ.401 கோடி நன்கொடை..!!