×

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.54.44 லட்சம் உண்டியல் காணிக்கை

மண்ணச்சநல்லூர், அக்.1: சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் மாதமிருமுறை எண்ணப்படுகின்றன. கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் நேற்று மொத்தம் 34 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் உண்டியல் பணத்தை எண்ணி தங்கம், வெள்ளி நகைகள், அயல்நாட்டு கரன்சிகளை கணக்கெடுத்தனர். இதில் உண்டியலில் ரொக்கமாக 54 லட்சத்து 44 ஆயிரத்து 492 ரூபாயும், 1 கிலோ 200 கிராம் தங்க நகைகள், 6 கிலோ 185 கிராம் வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள் 93 இருந்தன.

Tags : Samayapuram Mariamman Temple ,
× RELATED அகிலாண்டேஸ்வரி கோயில் தளிகையுடன்...