×

எடமலைப்பட்டிபுதூரில் குடிமனை பட்டா வழங்க கோரி விஏஓ அலுவலகத்தை முற்றுகை

திருச்சி, அக்.1: குடிமனை பட்டா கோரி எடமலைப்பட்டிபுதூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரநகர், முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மக்கள் குடிமனை பட்டா கேட்டு எடமலைப்பட்டிபுதூர் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். ஆனால் இதுவரை குடிமனை பட்டா வழங்கப்படவில்லை. இதை கண்டித்து மார்க்சி–்ஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் விஏஓ அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இந்நிலையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா, பகுதி செயலாளர் வேலுசாமி ஆகியோர் தலைமையில் 160க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து எடமலைப்பட்டிபுதூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்று, சிறிது நேர ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் விஏஓவிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Siege ,office ,VAO ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!