×

சாலையோர முட்செடிகளை அகற்ற மக்கள் கோரிக்கை

திருக்கோவிலூர், அக். 1:  திருக்கோவிலூர் அருகே நரியந்தல் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து  எடையூர் கிராமத்திற்கு செல்லும் சாலையின் இரு புறத்திலும் செடி, கொடிகள் வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களின் மீது முள் செடிகள் கண்கள் மீது  பட்டு எதிரே வருபவர்கள் மீது மோதி விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. மேலும் இவ்வழியாக பேருந்து வசதி இல்லாத காரணத்தால் போர்க்கால அடிப்படையில் சாலையின் இரு புறத்தில் உள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...