×

எல்.என்.புரம் ஊராட்சியில் தேங்கிய மழைநீர் அகற்றம்

பண்ருட்டி, அக். 1:  பண்ருட்டி அருகே எல்.என்.புரம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரன் நகர், திலகவதி நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
இதனால் கொசு உற்பத்தி அதிகமாகி பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்தனர். இதனை அறிந்த பிடிஓ ரவிச்சந்திரன், ஊராட்சி செயலர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடங்களுக்கு சென்று தேங்கி நின்ற மழை நீரை அகற்றினர்.
திருநகர் பகுதியில் 30 வருடங்களாக சாலை வசதி இல்லாமல் இருந்ததை பொதுமக்கள் கொடுத்த கோரிக்கையின் பேரில் தற்போது தார்சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மின்விளக்கு வசதி இல்லாத இடங்களில் விளக்குகள் தினந்தோறும் எரிவதற்கு மின் ஒயர்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. தெருவில் தண்ணீர் தேங்காமல் இருக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Tags : LNPuram Panchayat ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் எல்என்புரம்...