×

மாவட்டத்தில் மழையளவு

விருதுநகர், அக். 1: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலும், புழுக்கமும் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி துவங்கி இரவு முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்தது. வத்திராயிருப்பு, பிளவக்கல், திருவில்லிபுத்தூர் பகுதிகளில் கன மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு மி.மீ வருமாறு: அருப்புக்கோட்டை 15, சாத்தூர் 112, திருவில்லிபுத்தூர் 128, சிவகாசி 67, விருதுநகர் 39.50, திருச்சுழி 23, ராஜபாளையம் 74, காரியாபட்டி 53.80, வத்திராயிப்பு 146.40, பிளவக்கல் 115.60, வெம்பக்கோட்டை 26.50, கோவிலாங்குளம் 16.60 மி.மீ பதிவாகி உள்ளது. நேற்று மாலை 3.30 மணி முதல் சாரல் மழை பெய்தது.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...