×

ஏழாயிரம்பண்ணை கடை வீதியில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

சாத்தூர், அக்.1: சாத்தூர் அருகே, ஏழாயிரம்பண்ணை உள்ளது. இந்த ஊரைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. இந்த ஊரிலிருந்து சங்கரன்கோவில் மற்றும் கோவில்பட்டிக்கு, நகரில் உள்ள கடைவீதியை கடந்துதான் செல்ல வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த கடைவீதி சாலை மிகவும் குறுகலாக உள்ளது. மேலும் சாலையில் ஆக்கிரமிப்பும் உள்ளது. தினசரி பட்டாசு, தீப்பெட்டி ஆலை வாகனங்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி வாகனங்கள் என நூற்றுக்கணக்கான கடைவீதி வழியாக சென்று வருகின்றன. மேலும், இப்பகுதியில் பள்ளிகள், வங்கிகள், கோயில்கள் உள்ளன. இதனால், காலை, மாலை நேரங்களில் கடும் போகுவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் கோரிக்கை விடுத்தும் பயனில்லை. இப்பகுதி பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படும் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.  எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி கடை வீதி சாலையை அகலப்படுத்தி, போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : shop road ,Ezhirampanai ,
× RELATED கொள்ளிடம் அருகே மாதானம் புறக்காவல்...