×

வாலிபர் வெட்டிக்கொலை பழிக்குப்பழியாக பயங்கரம்

திருப்புவனம், அக்.1: திருப்புவனம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கருப்புராஜா மகன் கணேசபாண்டியன்(26). டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று மாலை பழையூர் தியேட்டர் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்மகும்பல் அவரை சுற்றி வளைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் சம்பவ இடத்திலேயே கணேசபாண்டியன் உயிரிழந்தார். தகவல் அறிந்த திருப்புவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து ெகாலையாளிகளை தேடி வருகின்றனர். சமீபத்தில் அஜித் என்ற வாலிபர் வைகை ஆற்றில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கணேசபாண்டியன், ஜாமீனில் வெளிவந்த நிலையில் வெட்டி கொலை செயப்பட்டுள்ளார்.  எனவே அஜித் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Plaintiff ,
× RELATED திருமண தகவல் மையம் மூலம் பெண்களை...