×

பயணியர் நிழற்கூடம் திறப்பு

சிவகங்கை, அக்.1: சிவகங்கையில் திருப்பத்தூர் சாலையில் கலெக்டர் அலுவலகம் முன் சிவகங்கை நகராட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகராட்சி ஆணையர் அயூப்கான், கூட்டுறவு விற்பனை பண்டக சாலை தலைவர் ஆனந்தன், நகராட்சி நிர்வாக கண்காணிப்பு அலுவலர் அறிவழகன், கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் காஜாமைதீன், சசிக்குமார், ராஜா, சந்திரன், கோபி, கோட்டையன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Passenger Photo Gallery ,
× RELATED கடைகளுக்கு முன்பாக பயணிகள் நிழற்கூடம் ஜவுளி வியாபாரிகள் எதிர்ப்பு