×

படகு மூழ்கியதில் பலியான மீனவ குடும்பத்திற்கு நிவாரண நிதி

ராமேஸ்வரம், அக்.1: பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ராமேஸ்வரம் வந்த ராமநாதபுரம் தொகுதி எம்.பி.,நவாஸ்கனி ராமேஸ்வரம் நகர் பகுதியில் பல்வேறு இடங்களுக்கு திறந்த ஜீப்பில் சென்று நன்றி தெரிவித்து பேசினார். தி.மு.க நகர் செயலாளர் நாசர்கான்(பொ), பொறுப்புக்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், வில்லாயுதம், காங்கிரஸ் நகர் தலைவர் ராஜாமணி, மார்க்சிஸ்ட் கம்யூ.,தாலுகா செயலாளர் சிவா, இந்திய கம்யூ.,நிர்வாகி செந்தில்வேல், மதிமுக நகர் செயலாளர் பாஸ்கரன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக கட்சியினர் உடன் சென்றனர்.ராமேஸ்வரம் நடராஜபுரம் கிராமத்திற்கு சென்ற எம்பி, சமீபத்தில் கடலூரில் இருந்து படகில் ராமேஸ்வரம் வந்தபோது பாக்ஜலசந்தி கடலில் படகு மூழ்கியதில் பலியான மீனவர்கள் மதன், இலங்கேஸ்வரன், உமாகண்ணன், உமாகாந்த் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று உறுவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து பேசினார். பின்னர் பாதிக்கப்பட்ட நான்கு மீனவர்களின் குடும்பத்தினரிடம் தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரத்தை வழங்கினார். பலியான மீனவர் மதனின் மனைவிக்கு அரசு வேலை வழங்கிட பரிந்துரை செய்வதாகவும், இவரின் மகள் படிப்பிற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். கிராமத்தலைவர் செல்லத்துரை, மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் தனபாலன் உடன் இருந்தனர்.

Tags : boat fishermen ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம்...