×

போதிய வசதியின்றி இயங்கும் நூலகத்திற்கு சொந்த கட்டிடம் வேண்டும் முதுகுளத்தூர் பொதுமக்கள் வலியுறுத்தல்

சாயல்குடி, அக்.1: முதுகுளத்தூரில் தனியார் வாடகை கட்டிடத்தில் போதிய வசதியின்றி இயங்கி வரும் வட்டார நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுகுளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 10க்கும் மேற்பட்ட பள்ளி, இரண்டு கல்லூரிகள், ஐ.டி.ஐ உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. சுற்றியுள்ள 48 பஞ்சாயத்துகளின் தலைநகராகவும் முதுகுளத்தூர் உள்ளது. முதுகுளத்தூர், கமுதி சாலையிலுள்ள தனியார் வாடகை வீட்டில் வட்டார நூலகம் இயங்கி வருகிறது. இதனை முதுகுளத்தூர் பேரூராட்சியில் குடியிருப்போர், சுற்றியுள்ள கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். 100க்கும் மேற்பட்டவர்கள் நிரந்தர வாசகர்களாக இருந்தும், நூலகத்தில் போதிய வசதியின்றி 10க்கும் குறைவானவர்களை வந்து செல்கின்றனர்.இளைஞர்கள் அரசு தேர்வுகளுக்கு படிப்பதற்கு மற்றும் உயர்கல்விக்கு தேவையான புத்தங்கள், குறிப்புகளை எடுப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். நூலகம் உள்ள வாடகை வீடு சிறியதாக இருப்பதால் அதிகமாக இருக்கும் புத்தகங்களை வைக்க இடம் இல்லாமல் அறைகளுக்குள் குவித்து வைத்துள்ளனர். தேவைப்படும் புத்தகத்தை தேடுவதற்கு சிரமப்பட்டு வாசகர்கள் வருகின்றனர். மேலும் வாசகர்கள் உட்கார்ந்து படிப்பதற்கு இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் சிரமப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர். எனவே வட்டார நூலகத்திற்கு முதுகுளத்தூரில் அரசு சார்பில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : public ,building ,Mudukulathur ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...