×

சிகிச்சைக்கு வந்தவர் மர்மச்சாவு

மதுரை, அக். 1: மதுரை அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரை கொடுக்குமிடமான அறை எண்-28 அருகில் 40 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து சிலர், மருத்துவமனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், இறந்து கிடந்தவர், தூத்துக்குடியைச் சேர்ந்த அசோக்பாண்டி(42) என்பதும், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் உடலை பிணவறைக்கு எடுத்துச் சென்றனர். அசோக்பாண்டியின் சட்டைப்பையிலிருந்து, முகவரியை தொடர்பு கொண்டபோது, சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வந்ததாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர். அசோக்பாண்டி இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Marmachau ,
× RELATED தனியார் விடுதியில் டாக்டர் மர்மச்சாவு திண்டுக்கல்லில் பரபரப்பு