×

தம்மம்பட்டி அருகே தற்கொலை மிரட்டல் விடுத்த தனியார் பள்ளி ஆசிரியர்

தம்மம்பட்டி, அக்.1:  தம்மம்பட்டி அருகே மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்த தனியார் பள்ளி ஆசிரியரை போலீசார் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தம்மம்பட்டி தனியார் பள்ளியில் முதுகலை ஆங்கில ஆசிரியராக இருப்பவர் மகேந்திரவர்மன்(55). மனைவி, மகன்களை பிரிந்து தனியாக வசித்து வரும், இவர் தம்மம்பட்டி உடையார்பாளையம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அவரது விசிட்டிங் கார்டுகளை மாடியிலிருந்து தூக்கி வீசிவிட்டு, மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக சத்தம் போட்டார். இதனையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு குவிந்தனர்.

தகவலறிந்த அங்கு வந்த தம்மம்பட்டி போலீசார் அவரிடம் சமாதானம் பேசி, தரைத்தளத்திற்கு அழைத்து வந்தனர். தரைத்தளத்திற்கு வந்த அவர் வெளியே வர மறுத்த நிலையில், போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கி சென்று தம்மம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மகேந்திரவர்மன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : private school teacher ,suicide ,Dhammampatti ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை