ஆத்தூர், அக்.1: ஆத்தூர் புதுப்பேட்டையில் கள்ளக்குறிச்சி தொகுதிக்கான எம்பி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த கௌதமசிகாமணி உள்ளார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் உள்ள மக்கள் பிரச்னைகளை அறிந்து கொண்டும் தீர்வு கானும் வகையில், ஆத்தூர் புதுப்பேட்டையில் திமுக எம்பி அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளார். இந்த அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று ஆத்தூர் நகர திமுக செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்தது. அலுவலகத்தை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா கலந்து கொண்டு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் எம்பி கௌதம சிகாமணி பேசுகையில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்கு வசதியாக எம்பி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் வாரத்தில் 6 நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் செயல்படும். எனவே பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை அலுவலக பணியாளர்களிடம் அளித்தால் அதன் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். ஆத்தூர் நகராட்சி பகுதியில் தற்போது போடப்பட்டுள்ள சாலை பணிகளில் பெரும் அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. அந்த பணிகள் உள்ளிட்ட நகராட்சி, ஒன்றிய அளவில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ உதயசூரியன், முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னதுரை, குணசேகரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முல்லை.பன்னீர்செல்வம், திமுக ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் செழியன், மணி(எ) பழனிசாமி, முருகேசன், சக்கரவர்த்தி, பாலு, நகர செயலாளர் வேல்முருகன், அகிலன், அழகுவேல், ஷேக்மெய்தீன், முருகேசன், சண்முகம், சோமசுந்தரம், செல்வம், சரவணன், வேல், முருகேசன், காங்கமுத்து, வெங்கடேசன், ராமமூர்த்தி, நந்தகுமார், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அன்னபூரணி, தலைவாசல் அரங்கசாமி, கௌதமன், ராஜேந்திரன், சங்கர், ஸ்டாலின், வேலுமணி, ராஜாமணி, ராஜசேகர், கமால்பாஷா, கார்த்திக்கேயன், அகிலாகண்ணன், ராமச்சந்திரன், மாணிக்கம், பர்கத், ரூபி.நாகராஜ், அயோத்தியாபட்டணம் சங்கர், கோபால் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவராமன், சிவாஜி, மல்லியகரை ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன் நன்றி கூறினார்.