ஓமலூர், அக்.1: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வாயில் முழக்க போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் மற்றும் நிர்வாக பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், வாயிற்முழக்க போராட்டம் நடந்தது.
இது குறித்து பல்கலைக்கழக பணியாளர்கள் கூறுகையில், ‘ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையின்ன் படி, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்காக பலமுறை நினைவூட்டல் கடிதம் கொடுத்தும், நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது குறித்து சங்க நிர்வாகிகள் மற்றும் ஆதரவு சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்,’ என்றனர்.