×

புதிய வழிதடத்தில் பேருந்து இயக்கம் எம்எல்ஏ சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்

சேந்தமங்கலம், அக்.1: காளப்பநாயக்கன்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி காளப்பநாயக்கன்பட்டியை அடுத்த திருமலைப்பட்டி பிரிவில் உள்ளது. காளப்பநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து காலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு பேருந்து வசதி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர், அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பேசி பேருந்து வசதிக்கு ஏற்பாடு செய்தார். இதனைத்தொடர்ந்து, நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் வழியாக காளப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளி உள்ள திருமலைப்பட்டி பிரிவுக்கு பேருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதிய வழித்தடத்திற்கான பேருந்தை சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பழனிசாமி, நிர்வாகிகள் கோகுலகிருஷ்ணன், ராமசாமி, தலைமையாசிரியர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chandrasekaran ,route ,
× RELATED குன்னத்தூர் சத்திர கடைகளால் எவ்வளவு...