×

கொல்லிமலையில் வல்வில்ஓரிக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்

நாமக்கல், அக்.1: கொல்லிமலையில் வல்வில் ஓரிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது. நாமக்கல்லில், வல்வில் ஓரி அறக்கட்டளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. புரவலர் நல்லசாமி தலைமை வகித்து பேசினார். அப்போது, கொல்லிமலையில் வல்வில் ஓரிக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.  கொல்லிமலையை ஆண்ட வல்வில்ஓரி நினைவாக மாவட்ட நிர்வாகம் ஆண்டுதோறும் வல்வில் ஓரி விழாவை கொண்டாடி வருகிறது. தர்மபுரியில் அதியமானுக்கு எவ்வாறு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளதோ, அதேபோல் கொல்லிமலையில் வல்வில் ஓரிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும். ஓரி மன்னன் சிலையை புனரமைத்து, அப்பகுதியில் பூங்கா ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் அறக்கட்டளை நிர்வாகிகள் பாலு, கந்தசாமி, மணி, அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு