×

பொத்தனூரில் சமுதாய வளைகாப்பு விழா

பரமத்திவேலூர், அக்.1: பொத்தனூரில், சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பூ வைத்து, வளையல் அணிவித்து, சீர்வரிசைகளுடன் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. மேலும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சியாக மாற்றும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த துணிப்பைகள் வழங்கப்பட்டது. ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும், மரக்கன்றுகள் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவருக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


விழாவில், சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் மாவட்ட ஆவின் தலைவர் ராஜேந்திரன், பொத்தனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் நாராயணன்,  பேரூராட்சி செயல் அலுவலர் கீதா, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பிரபா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். இதில் கபிலர்மலை வட்டார அங்கன்வாடி பணியாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள், கர்ப்பிணி பெண்களின் உறவினர்கள், பொத்தனூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், பொது சுகாதாரம் மற்றும் சுய உதவி குழுவினர், தள்ளுவண்டி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Community Baby Shower Festival ,Pothanur ,
× RELATED பொள்ளாச்சி-போத்தனூர் இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்