×

ஊத்தங்கரையில் 6 ஆண்டாக பூட்டி கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்

ஊத்தங்கரை, அக்.1: ஊத்தங்கரை அருகே, 6 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் மகளிர் சுகாதார வளாகத்தை சீர் செய்து பயன்பாட்டிற்கு திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்தங்கரை அடுத்த மண்ணாடிப்பட்டி கிராமத்தில், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலான வீடுகளில் தனிநபர் கழிவறை கிடையாது. அதனால் கடந்த 2010-2011ம் ஆண்டில், ₹2.25 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார வளாகம், அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டது. கட்டப்பட்டு சில ஆண்டுகளில் சரிவர பராமரிப்பின்றி பழுதானது. இதனால் மகளிர் மற்றும் குழந்தைகள் இயற்கை உபாதைகளை கழிக்க வயல் வெளி பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது. இரவு நேரங்களில் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பெண்களின் நலன் கருதி கழிவறையை சீரமைத்து, பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Women's Health Complex ,
× RELATED சுந்தரநாச்சியார்புரம் ஊராட்சியில்...