கிருஷ்ணகிரி, அக்.1: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திலுள்ள மின்பெட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. தரைத்தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். அப்போது, முதல் மாடியில் கலெக்டர் அறையில் அருகில் உள்ள மின்பெட்டியில் திடீர் என்று தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து கீழ்தளத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று டிரை கெமிக்கல் பவுடரை கொண்டு தீயை அணைத்தனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முழுவதும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.