×

நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.1: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி திருப்பூர் மாவட்ட நடைபாதை வியாபார தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலையோர நடைபாதை வியாபாரத்தை முறைபடுத்த வேண்டும், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் உடனடியாக நடைபாதை வியாபாரத்தை முறைபடுத்தும் கமிட்டியினை அமல்படுத்த வேண்டும். தெருவியாபாரிகள் அனைவருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி திருப்பூர் மாவட்ட நடைபாதை வியாபார தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாகராட்சி அலுவலகம் எதிரில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட நிர்வாகி ஜெகநாதன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரவி, ஏஐடியுசி தொழிற்சங்க நிர்வாகிகள், நடராஜன், மாவட்ட பொது செயலாளர் சேகர், சசிகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

Tags : Demonstration ,sidewalk traders ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்