×

அரியலூர் குறைதீர் கூட்டத்தில் 473 கோரிக்கை மனுக்கள் குவிந்தன

அரியலூர், அக். 1: அரியலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 473 கோரிக்கை மனுக்கள் குவிந்தன.அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வினய் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 473 மனுக்களை பெற்றார். பின்னர் இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்டதுறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் வினய் அறிவுறுத்தினார். இதைதொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 19 கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், துணை ஆட்சியர் ரவிச்சந்திரன், உதவி இயக்குனர் பழனிச்சாமி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ariyalur ,grievance meeting ,
× RELATED விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை