×

பைக் மீது கார் மோதி ஓய்வு பெற்ற எஸ்ஐ பலி

நெல்லை, அக். 1: கூடங்குளம் அருகே பைக் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயேஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ இறந்தார்.கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகேயுள்ள காணிமடத்தை சேர்ந்தவர் நேசமணி (61). ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ ஆவார். இவர் நேற்று முன்தினம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு சென்று விட்டு அன்றிரவு பைக்கில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். கூடங்குளம் அருகே பைக் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் திடீரென பைக் மீது மோதியது. இதில் பைக்லிருந்து தூக்கி வீசப்பட்ட நேசமணி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags : car collision ,
× RELATED மின் கம்பத்தில் கார் மோதல் 2 பேர் கருகி பலி