×

நாட்டு நலப்பணி திட்ட முகாம்

திருவேங்கடம், அக்.1: திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக 7 நாட்கள் சிறப்பு முகாம் சாமிநாதபுரம் கிராமத்தில் நடந்தது.
 துவக்க விழாவிற்கு சாமிநாதபுரம் ஊர் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். நாட்டாமை சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சகாதேவன் வரவேற்றார். முகாமில் குண்டம்பட்டி சுப்புராஜ் தலைமையில் மாணவர்கள், இளைஞர்கள், மற்றும் ஆசிரியர்கள் மரக்கன்றுகளை நட்டினர்.  குருவிகுளம் வட்டார மருத்துவ அலுவலர் மகேஸ்வரன் தலைமையில் டாக்டர் நித்யா, செவிலியர் சுஜா மற்றும் மருத்துவ குழுவினரின் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.  நிறைவு விழாவில் திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் பள்ளி முதல்வர் பொன்னழகன் என்ற கண்ணன், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் நாராயணன், தொழிற்கல்வி ஆசிரியர் ஜெயராஜ், ஞானசுந்தரி அம்மாள் அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயராகவன், குருவிகுளம் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் மாரிச்சாமி, ஆசிரியர்கள் ராமமூர்த்தி, சேகர், சுப்புலட்சுமி, சாந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். மாணவர்களின் சேவையை பாராட்டி சாமிநாதபுரம் நாகு, வீரகுமார் மற்றும் இளைஞர்கள் நினைவுப்பரிசுகளை வழங்கினர். ஏற்பாடுகளை என்எஸ்எஸ் திட்ட அலுவலர்  பொன்னிருளாண்டி தலைமையில் ஆசிரியர்கள் இளங்கோவன், மாரியப்பன் மற்றும் முனியராஜ் செய்திருந்தனர். உடற்கல்வி ஆசிரியர் திருப்பதிராஜன் நன்றி கூறினார்.

Tags : Country Welfare Program Camp ,
× RELATED நாட்டு நலப்பணி திட்டம் முகாம்