×

கும்மிடிப்பூண்டி அருகே முகம் சிதைத்து வாலிபர் கொடூர கொலை : போலீஸ் விசாரணை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தாமரை ஏரி குளம் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் முகத்தில் காயத்துடன் இறந்து கிடப்பதாக கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்படி சம்பவ இடத்துக்கு போலீசார்  சென்று விசாரித்தனர். இதில், சடலமாக கிடந்தவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும். முகத்தை சிதைத்து கொலை செய்துள்ளதும் தெரிய வந்தது.

அவரது உடல் அருகில் ஒரு கைப்பை கிடந்தது. இதையடுத்து, வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வழிப்பறியின்ேபாது ஏற்பட்ட தகராறில் வடமாநில வாலிபரை கொள்ளையர்கள் அடித்து கொன்றார்களா? அல்லது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Tags : Police investigation ,Kummidipoondi ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...