×

காரில் ரூ.11 லட்சம் சிக்கிய விவகாரம்: காத்திருப்போர் பட்டியலுக்கு திருச்சி டிஎஸ்பி மாற்றம்

திருச்சி: திருச்சி கே.கே.நகர் ஈ.வி.ஆர் சாலையில் உள்ள அரிசி குடோன் அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பு கே.கே.நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் காரிலிருந்து இறங்கி ஒருவர் ஓட்டம் பிடித்தார். அவரை விரட்டி சென்று  போலீசார் பிடித்தனர். காரில் சோதனை செய்தபோது இருக்கையின் அடியில் கட்டு கட்டாக ரூ.11 லட்சம் இருந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்ைல. இதையடுத்து காரையும், பணத்தையும் பறிமுதல் செய்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே காரிலிருந்து இறங்கி ஓடிய நபரிடம் விசாரித்தபோது, அவர் திருச்சி உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி ரவிச்சந்திரன் என்பது தெரியவந்தது. மேலும் அவர் தனது நண்பர்கள் 2 பேருடன் காரில் பணத்துடன் வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அது முறைகேடாக வந்த பணமா? என போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரவிச்சந்திரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். …

The post காரில் ரூ.11 லட்சம் சிக்கிய விவகாரம்: காத்திருப்போர் பட்டியலுக்கு திருச்சி டிஎஸ்பி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy K. K.K. ,Nagar ,Rice Kudon ,R Road ,K.K. Nagar Police ,Dinakaran ,
× RELATED சிக்கன் கடைக்காரரிடம் பணம் பறித்தவர் கைது