பொன்னமராவதி,அக்.1: பொன்னமராவதி தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது. தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் தாலுகா அலுவலக வளாகத்தில் தென்னை, மற்றும் பழவகை மரக்கன்றுகள் தாலுகா அலுவலக வளாகத்தில் நடப்பட்டது. இதில் ஆர்.ஐ.ஜோதி, சர்வேயர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் தாலுகா அலுவலர்கள் கலந்து கொண்டனர்.