×

சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு தெரு வியாபாரத்தை முறைபடுத்த வலியுறுத்தி ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, அக்.1: தெரு வியாபாரத்தை முறைபடுத்த வலியுறுத்தி ஏஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.புதுக்கோட்டை மாவட்ட தெரு வியாபார தொழிலாளர்கள் சங்கத்தின் (ஏஐடியூசி) புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ரெங்கையா தலைமை தாங்கினார். இதில் மாநில பொது செயலாளர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார். தெரு வியாபாரத்தை முறைப்படுத்துதல், தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் சட்டம் 2014ம் ஆண்டு மத்திய சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தெரு வியாபார தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : demonstration ,AITUC ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு